ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “இந்த பிட்ச் வித்யாசமான மண்ணை கொண்ட மைதானம் என்பதால் பந்தின் வேகத்தைக் குறைத்து. மேலும், எங்களுக்கு இந்த பிட்ச்சானது சாதகமாகச் செயல்பட்டது. மேலும், ஷிவம் துபே சுழல் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக அடித்ததால், நாங்கள் எங்கள் வேக பந்து தாக்குதலுக்கு தயாரானோம்.
எங்களுக்கு இந்த போட்டிகளில் 2 புள்ளிகளைப் பெறுவது முக்கியமானது. எங்கள் அணியின் அபிஷேக் சர்மா பேட் செய்வதைப் பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி அளித்தது. அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக அமைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவரை சுதந்திரமாக விளையாட ஊக்குவிக்கிறோம். அவரது பவர் பிளே அதிரடி ஆட்டம் தான் நாங்கள் வெற்றி பெற முதல் காரணமாக பார்க்கிறேன்.
அதன் பிறகு குறிப்பாக எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் வரும் போது எழுந்த சத்தம் நான் இது வரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. மேலும், இன்னும் ஐந்து ஆட்டங்கள் எங்களுக்கு இதே ஹைதராபாத் மைதானத்தில் இருப்பதால், நாங்கள் அந்த 5 போட்டிகளையும் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறோம், ” என்று நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…