Virat Kohli Chris gayle [File Image]
IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று ‘ பாஸ் ஆப் ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவரது கருத்தை கூறி இருக்கிறார் .
அவர் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) 50 சதங்களுக்கு மேல் அடித்த வீரராக கோலி இருக்கிறார்.
தற்போது, 35 வயதான அவருக்கு இன்னும் எல்லா ஃபார்மேட்களிலும் விளையாடுவதற்கு நிறைய வருடங்கள் இருக்கிறது. அவர்கள் இருவரையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை” என்று கிரிக்பஸ்ஸிடம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே 20 முறையும், ஆர்.சி.பி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘ட்ரா’ ஆனது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…