Virat Kohli Chris gayle [File Image]
IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று ‘ பாஸ் ஆப் ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவரது கருத்தை கூறி இருக்கிறார் .
அவர் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) 50 சதங்களுக்கு மேல் அடித்த வீரராக கோலி இருக்கிறார்.
தற்போது, 35 வயதான அவருக்கு இன்னும் எல்லா ஃபார்மேட்களிலும் விளையாடுவதற்கு நிறைய வருடங்கள் இருக்கிறது. அவர்கள் இருவரையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை” என்று கிரிக்பஸ்ஸிடம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே 20 முறையும், ஆர்.சி.பி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘ட்ரா’ ஆனது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…