என் வாழ்க்கையில் சதத்திற்க்காக விளையாடவில்லை, 485 நாட்களில் ஒரு சதம் கூட அடிக்காத கோலி..!

Published by
murugan

நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதில்லை என கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் , 5 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 3-2  என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று இரு அணிகளும் சமமாக உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் கோலி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என கடைசியாக விளையாடிய 43 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 136 ரன்கள் எடுத்தார். அதன் பின் ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதில்லை, அதனால்தான் நான் குறுகிய காலத்தில் பல சாதனைகளை பெற்றேன். அணி வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. நான் சதம் அடித்ததும்  அணி வெற்றி பெறவில்லை என்றால் அந்தச் சதத்தால் எந்தப் பயனும் இல்லை என கூறினார்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 27, ஒருநாள் போட்டியில் 43 , ஐபிஎல்லில் 5 சதங்களும் அடித்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Published by
murugan
Tags: Virat Kohli

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

4 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

6 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

6 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

7 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

8 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

8 hours ago