விராட் கோலியுடன் விளையாடும்போது வித்தியாசமாக உணர்ந்தேன்- பந்த்..!

Default Image

விராட் கோலியுடன் விளையாடும்போது வித்தியாசமாக உணர்ந்தேன் என்று பந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோணியுடன் பேட்டிங் பார்ட்னராக களமிறங்குகையில் பேட்டிங் மிக சுலபமாக இருக்கும். எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னரும் அவர்தான் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் விக்கெட் கீப்பராக களத்தில் இருக்கும் போது நாம் எதுவும் புதியதாக செய்ய வேண்டிய தில்லை. அவரை அப்படியே பின்பற்றினாலே போதும். எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எனக்கு அவருடன் பெட்டிங் செய்யும் வாய்ப்பு கொஞ்சம் தான் கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தாக விராட்கோலியுடன் விளையாடியதை பற்றி பேசிய அவர் தான் வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாகவும் போட்டியின்போது அவர்கள் மனநிலை எவ்வாறு செயல்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்