இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனில் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக எனக்கு தெரியவில்லை. ஒருநாள் தொடரில் வேண்டுமானலும் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக இருக்கலாம்.
மேலும் டி20, போட்டிகளில் அவர் சிறந்த கேப்டன் கிடையாது. இங்கிலாந்து அணியில் எந்த வீரர் பேட்டிங் செய்தாலும், பவுலிங் செய்தாலும் மோர்கனுக்கு வெற்றி பெற்று தருவார்கள். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை அப்படி இல்லை. ஐபிஎல்லில் சிறந்த அணியை மோர்கன் அமைக்க வேண்டும். மோர்கன் டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…