‘முதல் போட்டி இப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது ..’ – மயாங்க் யாதவ் ஓபன் டாக்

Published by
அகில் R

Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் நேற்று போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார்.

இதன் மூலம் லக்னோ அணி, நேற்றைய போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து போட்டி முடிவடைந்த பிறகு மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பற்றி பேசி இருந்தார். அவர், “எனது அறிமுக போட்டி இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

முதல் போட்டி என்பதால் சற்று பதற்றம் இருந்தது ஆனால் முதல் பந்தை வீசிய பிறகு அந்த பதற்றம் விலகியது. ஆரம்பத்தில் நான் மெதுவாக பந்து வீசலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்த பிட்ச் எனது வேகத்துக்கு சாதகமாக அமைந்ததால் எனது அணியின் கேப்டன் என்னை வேகமாக பந்து வீச சொன்னார்.

எனக்கு மிகவும் பிடித்த விக்கெட் எனது முதல் விக்கெட் ஜானி பேர்ஸ்டோவ்வின் விக்கெட் தான். நான் சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அது அப்படி அமையவில்லை. இன்று இரவு நான் விளையாடிய இந்த அறிமுக போட்டி எனக்கு மிகவும் சந்தோசமாக அளிக்கிறது” ,என்று மயாங்க் யாதவ் போட்டி முடிந்த பிறகு கூறி இருந்தார்.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago
RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

8 hours ago
சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

11 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

12 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago