இனவெறி பேச்சு: சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” – வார்னர் வருத்தம் !

Published by
Surya

சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி குறித்து பேசிய நிலையில், அவர்களின் செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.

சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் ரஹானே, அஷ்வின், நடுவர்களாக பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உட்பட பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா ரசிகர்கள் செய்த இந்த செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், இனவெறி தொடர்பான ரசிகர்களின் கருத்திற்கு முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஆஸ்திரேலிய மக்களிடம் இருந்து சிறப்பான ஒன்றையே எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

43 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

55 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago