உலகக்கோப்பை வெல்வதற்கு காரணம் நான் இல்லை …! ரகசியத்தை உடைத்த கவுதம் கம்பிர்?

Published by
அகில் R

கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது.

இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.  இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் விண்ணப்பித்துள்ளதாக அடிப்பட்டது. அதிலும் முன்னாள் இந்திய கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதி ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ விரைவில் வெளியிடுவார்கள் என பல தகவல்கள் வெளியானது.

இது குறித்து கடந்த சில நாட்கள் கவுதம் கம்பிர் மௌனமாகவே இருந்தார், நேற்று அபுதாபியில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு வீரர்களுடன் ஒரு உரையாடலில் அவர் பேசிய போது, அங்கு ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு பயிற்சியாளரின் விருப்பத்தை பற்றி மறைமுகமாக கம்பிர் பதிலளித்திருந்தார்.

அந்த மாணவர், “நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க விரும்பினால், உங்கள் அனுபவத்தால் எப்படி இந்திய அணியை உலகக்கோப்பையை வெற்றி பெற வைப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கம்பிர்,”நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மிகவும் விரும்புகிறேன். நமது தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

மேலும், உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை அங்கீகாரம் செய்கிறோம், ​​அதைவிட பெரிய மரியாதை எப்படி இருக்க முடியும்? இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் இல்லை, உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்கள் தான்.

அவர்கள் தான் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள். எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் நாங்கள் விளையாடி அவர்களை அங்கீகாரப்படுத்துவோம். மேலும், இந்தியா உலகக்கோப்பையை கட்டாயமாக வெல்லும்.

அதற்கு மிக முக்கியமான விஷயம் வீரர்கள் பயமின்றி இருக்க வேண்டும்”, என்று அவர் பதிலளித்திருந்தார். இவர் கூறியதன் அடிப்படையில் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இவர் தான் என்ற ரகசியத்தை மறைமுகமாக சொல்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago