உலகக்கோப்பை வெல்வதற்கு காரணம் நான் இல்லை …! ரகசியத்தை உடைத்த கவுதம் கம்பிர்?

Published by
அகில் R

கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது.

இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.  இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் விண்ணப்பித்துள்ளதாக அடிப்பட்டது. அதிலும் முன்னாள் இந்திய கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதி ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ விரைவில் வெளியிடுவார்கள் என பல தகவல்கள் வெளியானது.

இது குறித்து கடந்த சில நாட்கள் கவுதம் கம்பிர் மௌனமாகவே இருந்தார், நேற்று அபுதாபியில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு வீரர்களுடன் ஒரு உரையாடலில் அவர் பேசிய போது, அங்கு ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு பயிற்சியாளரின் விருப்பத்தை பற்றி மறைமுகமாக கம்பிர் பதிலளித்திருந்தார்.

அந்த மாணவர், “நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க விரும்பினால், உங்கள் அனுபவத்தால் எப்படி இந்திய அணியை உலகக்கோப்பையை வெற்றி பெற வைப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கம்பிர்,”நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மிகவும் விரும்புகிறேன். நமது தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

மேலும், உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை அங்கீகாரம் செய்கிறோம், ​​அதைவிட பெரிய மரியாதை எப்படி இருக்க முடியும்? இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் இல்லை, உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்கள் தான்.

அவர்கள் தான் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள். எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் நாங்கள் விளையாடி அவர்களை அங்கீகாரப்படுத்துவோம். மேலும், இந்தியா உலகக்கோப்பையை கட்டாயமாக வெல்லும்.

அதற்கு மிக முக்கியமான விஷயம் வீரர்கள் பயமின்றி இருக்க வேண்டும்”, என்று அவர் பதிலளித்திருந்தார். இவர் கூறியதன் அடிப்படையில் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இவர் தான் என்ற ரகசியத்தை மறைமுகமாக சொல்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

6 hours ago

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

6 hours ago

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

8 hours ago

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

9 hours ago

CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…

10 hours ago