ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சேலம் சின்னப்பன்பட்டியை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடராஜன், ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது.
ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். இந்திய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் ஆதரவளித்தார்கள் மற்றும் உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார், பாராட்டினார். வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. விராட் கோலி கோப்பையை கொடுத்தபோது கண்கலங்கினேன்.
கடினமாக உழைத்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு நானே சாட்சி. கடின உழைப்பு ஒருவரை நிச்சியம் உயரத்துக்கு கொண்டு செல்லும். வெற்றி பெற என்ன முடியுமோ அதை நான் செய்தேன். எனக்கு ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. என்னை அவர்களின் வீடு மகனாக பார்க்கிறார்கள். சேலத்தில் இருந்து வரும் காலங்களில் பல வீரர்கள் வருவார்கள். பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…