இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 29 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, 11 ஓவரில் வார்ன்ர் 28 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்த பந்திலே வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.
பின்னர், மத்தியில் இறங்கிய பிரியாம் கார்க் , அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியாம் கார்க் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…