#IPL2021: “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் வீட்டிலே இருக்கின்றனர்; இல்லையென்றால்..”- பிசிசிஐ!

Published by
Surya

ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர்.

அந்தவகையில், கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோர் வெளியேறினார்கள். இதனால் அணி நிர்வாகம் திணறி வருகின்றது. இன்று இரண்டு அம்பயர்கள் தொடரில் இருந்து வெளியேறினார்கள்.

வீரர்கள், ஊழியர்கள் என பலரும் கொரோனா அச்சம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிவரும் நிலையில், ஐபிஎல் தொடரை ரத்து செய்யவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், Reuters ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர்,

“ஐபிஎல் தொடரை நடத்துவது, இப்பொழுது மிகவும் முக்கியமானது. பல எதிர்ப்புகள் வந்தாலும், பொருளாதாரத்திற்கு கணிசமான பணத்தை உருவாக்குகிறது இந்த ஐபிஎல் லீக் தொடர். அதை இந்த சூழலிலிருந்தும் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரை நிறுத்துவைப்பது, எவ்வாறு உதவும்?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago