ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக மிக வேகமாக 246 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டியதன் மூலம் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். மேலும், ரோஹித் மேத்யூ ஹைடனின் சாதனையை முறியடித்தார். மேத்யூ ஹைடன் 251 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டினார். அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 15,000 ரன்களையும் கடந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக குறைந்த இன்னிங்சில் 11,000 ரன்களை எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை 241 இன்னிங்ஸில் சாதித்தார்.
241 – சச்சின் டெண்டுல்கர்
246 – ரோஹித் சர்மா
251 – மேத்யூ ஹேடன்
258 – சுனில் கவாஸ்கர்
261 – கார்டன் கிரீனிட்ஜ்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்ததில் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை ரோஹித் சர்மாவிற்கு முன்பாக சேவாக், சச்சின் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் உள்ளனர். ஒரு தொடக்க வீரராக இந்தியாவிற்காக அதிக ரன்கள் எடுத்த வீரரில் வீரேந்திர சேவாக், 16,119 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 15,335 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கவாஸ்கர் 12,258 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா உள்ளார்.
இந்தியா -இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 42 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்து 9 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் தற்போது ரோஹித் 47, புஜாரா 14 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…