இந்திய அணியின் ஹீரோ தினேஷ் கார்த்திக் கணிப்புப்படி நடந்த போட்டி!பாம்பின் பல்லை பிடுங்கியதன் பின்னணி …….

Published by
Venu

கொழும்புவில் நேற்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டி,  நடைபெற்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில்லர் வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக். தோல்வியின் விளிம்பிலிருந்து இந்தியாவை தினேஷ் கார்த்திக் காப்பார் என்று யாரும் நினைத்தார்களோ? இல்லையோ.. ஆனால் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக நினைத்தார் என்றே கூற வேண்டும்.

Image result for dinesh karthik

எப்படி என்று கேட்கிறீர்களா? போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்தார். அதாவது, வங்கதேச அணி உருவானதிலிருந்து சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது சிறந்த அணியாக திகழ்கிறது. எனினும் வங்கதேச அணிக்கு எதிராக தோற்பதை இந்திய ரசிகர்கள் விரும்புவதில்லை. வங்கதேசத்துடனான தோற்றீர்கள்? என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் கேள்விகள் எழும். எனவே வங்கதேசத்தை வெல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதற்கு ஏற்ற வகையில், களத்திலும் அவ்வாறே செயல்பட்டார். வங்கதேசத்துடன் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் அவரது ஆழ்மனதில் பதிந்து அவரை ஆட்டிப்படைத்ததோ என நினைக்கும் அளவிற்கு அவரது இறுதிக்கட்ட ஆட்டம் இருந்தது. 2 ஓவரில் 34 ரன்கள் என்ற கடினமான சூழலிலும் டென்ஷன் ஆகாமல் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.ஆக மொத்தத்தில், வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என்பதை போட்டிக்கு முன்னரே தீர்மானித்துவிட்டு, அதன்படி தன்னம்பிக்கையுடன் ஆடி வெற்றி தேடி தந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

47 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago