இந்தியா, இங்கிலாந்து இடையேயான நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3-வதுநாள் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !
முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று இரவு தனிப்பட்ட காரணத்தால் விளையாடி கொண்டிருந்த 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக இந்தியாவின் இளம் வீரரான தேவதூத் படிக்கல் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார்.
எம்சிசி (MCC) -ன் விதி எண்: 24.1.1.2 படி விளையாடி கொண்டு இருக்கும் ஒரு வீரர் அந்த போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர் பந்து வீசவோ அல்லது அணியின் கேப்டனாகவோ செயல் பட முடியாது.
மேலும், அந்த மாற்று வீரர் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டுமென்றால் நடுவர் சம்மதத்துடன் விக்கெட் கீப்பராக செயல்படலாம். ஒருவேளை விளையாடி கொண்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரரால் பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் முடியும்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…