சச்சினை விட இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் – ரமீஸ் ராஜா.!

Default Image

சச்சினை விட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் சிறப்பாக விளையாடினார் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்

சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் குவித்த போது சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடித்து கொடுப்பார், மேலும் டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கருக்கும் ராகுல் டிராவிட்டிற்க்கும் பெரிய போட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சச்சினை விட ராகுல் டிராவிட் சில நேரங்களில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார்,

ராகுல் டிராவிட் மிகவும் ஒரு சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர். மேலும் சச்சினை போன்று இயற்கையாக விளையாடும் திறமை ராகுல் டிராவிட்டுக்கு கிடையாது. ஆனால் அர்ப்பணிப்பு , மேலும் அவர் கடுமையான உழைப்பு போன்றவற்றின் மூலம் சிறந்த வீரராக மாறியிருக்கிறார்,என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்