ஐபிஎல் போட்டிகளில் அவர்தான் சிறந்த கேப்டன் ,இன்னும் கோப்பைகளை கைப்பற்றுவர்- கம்பீர் நம்பிக்கை

Default Image

ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் என்றால் அது ஒரு திருவிழா போன்று இந்தியாவில் கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் கோடைகாலங்களில் இந்த போட்டிகள் நடைபெறும்.ஆனால் போட்டிகளில் ரசிகர்களுக்கு பிடித்த அணி எது என்பதற்கு சண்டை நடந்தாலும் ,பிடித்த கேப்டன் என்பதற்கு தான் சண்டை அதிகம் வருகின்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் .அவர் கூறுகையில்,ரோகித் சர்மாதான் ஐபிஎல் போட்டிகளின் சிறந்த கேப்டன்.ஏனென்றால் ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது . கேப்டன் என்றால் கோப்பைகளை வெல்ல வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக ரோகித் இருப்பார். ஒய்வு பெறுவதற்குள் ரோகித் 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்