Ruturaj Gaikwad [File Image]
Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டி முடிந்த பின், வெற்றி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், இன்றைய ஆட்டம் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றும் சரியாக அமைந்தது. குஜராத் போன்ற ஒரு அணிக்கு எதிராக நாங்கள் இது போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
முதலில் நாங்கள் பந்துவீச்சைப் பொருட்படுத்தாமல் நன்றாகச் செயல்பட்டோம். பவர்பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை எடுத்துச் சென்றார் என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். ஷிவம் துபே அதிக நம்பிக்கை கொண்டவர், மேலும் அவரது நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார்.
தனிப்பட்ட முறையில் பீல்டிங்கிலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…