தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், எம்எஸ் தோனி விளையாடுவதை பார்க்க நாடே விரும்புகிறது என்றும் அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். 4 அல்லது 5வது இடத்திலோ களமிறங்கினால், இன்னும் நிறைய சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுவார் தோனி என்றார்.
மேலும் தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார். ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் களமிறங்க தயாராக இருந்தபோது, தோனி முன்னதாக களமிறங்கி சின்ன இன்னிங்ஸ் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியின் ஆட்டம் மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்விதமாக இருந்தது என புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…