அவரிடம் ஏதோ இருக்கு…ஆட்டத்தை பார்க்க நாடே விரும்புகிறது – சுனில் கவாஸ்கர்

Published by
பாலா கலியமூர்த்தி

தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், எம்எஸ் தோனி விளையாடுவதை பார்க்க நாடே விரும்புகிறது என்றும் அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். 4 அல்லது 5வது இடத்திலோ களமிறங்கினால், இன்னும் நிறைய சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுவார் தோனி என்றார்.

மேலும் தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார். ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் களமிறங்க தயாராக இருந்தபோது, தோனி முன்னதாக களமிறங்கி சின்ன இன்னிங்ஸ் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியின் ஆட்டம் மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்விதமாக இருந்தது என புகழாரம் சூட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago