நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது.  இதில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது இப்போட்டியின் 9வது ஓவரை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வீசி வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரிகள் சென்றது.

முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில், ஹர்திக் பாண்டியா திடீரென்று கீழே விழுந்து வலியால் துடித்தார். அங்கிருந்து மருத்துவக்குழுவினர் களத்திற்கு வந்து ஹார்திக் பாண்டியாவை பரிசோதித்தனர். அதன்பிறகு ஹார்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலி தாங்க முடியாததால் பெவிலியன் சென்றார். ஹார்திக் பாண்டியா ஓவரில் மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசி முடித்தார்.

இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து தற்போது சோதிக்கப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இப்போட்டியின் மூலம் இந்தியா உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. நாளை மறுநாள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியதில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார். இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். இலங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago