நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை…தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா!

Published by
பாலா கலியமூர்த்தி

Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 என்ற இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது.

இதன்பின் மிகப்பெரிய இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் கடைசி வரை தாறுமாறாக விளையாடியது. இருப்பினும், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 246 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎஸ் வரலாற்றிலேயே இந்த 277 ரன்கள் தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியில் 500 ரன்கள் கடந்துள்ள நிலையில், அதிக சிக்சர்களும் இந்த போட்டியில் தான் அதிகம். இதுபோன்று பல்வேறு சாதனைகள் இந்த ஒரு போட்டியின் மூலம் நிகந்துள்ளது. எனவே, இந்த தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது, டாஸ் வென்ற போது 277 ரன்களை ஹைதராபாத் எடுக்கும் என்று நான் உண்மையில் நினைக்கவில்லை.

இந்த விக்கெட் நன்றாக இருந்தது. நாங்கள் எப்படி பந்து வீசினோம் என்று சொல்வதை விட, ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என சொல்லலாம். இதனால் எதிரணி ஒரு பெரிய இலக்கை நிர்ணயம் செய்தது. பின்னர் பந்துவீச்சில் எதிரணி சிறப்பாக செயல்பட்டது. அது எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்த போட்டியில் 500 ரன்கள் கடந்திருப்பது பார்க்கும்போது இந்த விக்கெட் பேட்டர்களுக்கு பெரிதும் உதவியது என்றே கூறலாம்.

இப்போட்டியில் நாங்கள் சில விஷயங்களை செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், இளம் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள எங்கள் அணி, இப்போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொள்வோம் என்றார். மேலும் அவர் கூறியதாவது, பந்துகள் பலமுறை பவுண்டரி லைனை தாண்டி ரசிகர்களை நோக்கி சென்றது. இதனால் உரிய நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க நேரம் எடுக்கும் என்ற கூறிய ஹர்திக் பாண்டியா, எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு நன்றாகவே இருந்தது எனவும் தெரிவித்தார்.

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

47 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

60 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

3 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago