நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை…தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா!

Published by
பாலா கலியமூர்த்தி

Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 என்ற இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது.

இதன்பின் மிகப்பெரிய இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் கடைசி வரை தாறுமாறாக விளையாடியது. இருப்பினும், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 246 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎஸ் வரலாற்றிலேயே இந்த 277 ரன்கள் தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியில் 500 ரன்கள் கடந்துள்ள நிலையில், அதிக சிக்சர்களும் இந்த போட்டியில் தான் அதிகம். இதுபோன்று பல்வேறு சாதனைகள் இந்த ஒரு போட்டியின் மூலம் நிகந்துள்ளது. எனவே, இந்த தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது, டாஸ் வென்ற போது 277 ரன்களை ஹைதராபாத் எடுக்கும் என்று நான் உண்மையில் நினைக்கவில்லை.

இந்த விக்கெட் நன்றாக இருந்தது. நாங்கள் எப்படி பந்து வீசினோம் என்று சொல்வதை விட, ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என சொல்லலாம். இதனால் எதிரணி ஒரு பெரிய இலக்கை நிர்ணயம் செய்தது. பின்னர் பந்துவீச்சில் எதிரணி சிறப்பாக செயல்பட்டது. அது எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்த போட்டியில் 500 ரன்கள் கடந்திருப்பது பார்க்கும்போது இந்த விக்கெட் பேட்டர்களுக்கு பெரிதும் உதவியது என்றே கூறலாம்.

இப்போட்டியில் நாங்கள் சில விஷயங்களை செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், இளம் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள எங்கள் அணி, இப்போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொள்வோம் என்றார். மேலும் அவர் கூறியதாவது, பந்துகள் பலமுறை பவுண்டரி லைனை தாண்டி ரசிகர்களை நோக்கி சென்றது. இதனால் உரிய நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க நேரம் எடுக்கும் என்ற கூறிய ஹர்திக் பாண்டியா, எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு நன்றாகவே இருந்தது எனவும் தெரிவித்தார்.

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

11 hours ago
‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

12 hours ago
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

13 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

14 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

14 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

16 hours ago