Hardik Pandiya , T20 All Rounder NO : 1 [file image]
ஹர்திக் பாண்டியா : நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியின் கொண்டாட்டம் தற்போது வரை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள்.
அதிலும் குறிப்பிட்டுச் சொன்னால் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக 11 விக்கெட்டுகளும், 144 ரன்களும் குவித்து அசத்தி இருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் தனது திறமையை சரியாக பயன்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.
மேலும், இந்திய அணி துணை கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் செயலாற்றினார். தற்போது, இந்த தொடர் முடிவடைந்த பிறகு நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வேதச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக செயலாற்றுவார் என்று பிசிசி கூறியிருந்தது ஏற்கனவே இந்த தொடரில் அவர் துணை கேப்டனாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா ஐசிசி சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முன்னேறி உள்ளார். அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் முன்னேறி உள்ளார். இவரை தொடர்ந்து 2-வது இடத்தில் இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஹசரங்கா 222 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார்.
டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை :
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…