இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர் ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர் .ஆமாங்க இந்தாண்டு ஐபிஎல் திருவிழாவில் அதிக வானவேடிக்கை காட்டியவர்.சிக்சர் மழையை மைதானத்தில் பொழிந்து ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியவர்.இறுதிப்போட்டிக்கு மும்பை தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 393 ரன்களை குவித்தார். இதற்கிடையில் 14 விக்கெட்டையும் வீழ்த்தி 29 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார் .இந்நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “எனது முன்னுதாரணம்- எனது நண்பன்-எனது சகோதரர்- எனது லெஜெண்ட் எல்லாமே எம்.எஸ்தோனி தான் “என்று கூறியுள்ளார்.
MS என்றாலே எட்டும் தூரம் வரையிலும் ஒரே குரலாக தான் இருக்கும் அது தோனி….தோனி….தான் ,மைதானத்தில் தோனி உள்ளே நுழைந்ததும் வானத்தை பிளக்கும் கரகோஷத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி எல்லா வயது உடையவர்களையும் ரசிகர்களாக கொண்ட கேப்டனாக வலம் வருபவர் தனது ரசிகர்களோடு ஓடி பிடித்து விளையாடுபவர்.
இந்நிலையில் தான் இவரது ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…