hardik pandya [file image]
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா சர்வேதச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தார். இதனையடுத்து, அடுத்ததாக டி20 போட்டிகளில் யார் கேப்டனாக செயல்பட போகிறார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சபா கரீம், இந்தியாவின் டி20 கேப்டனாக இந்த இரண்டு வீரர்கள் சரியாக இருப்பார்கள் என தேர்வு செய்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சபா கரீம் ” முதலில் தீர்மானிக்க வேண்டிய விஷயம் யார் டி20 போட்டிகளில் கேப்டன் ஆக இருப்பார் என்பது. ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றுள்ளார், அவர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். ஆகவே, நீங்கள் புதிய கேப்டனைக் காண வேண்டும். எனது கருத்தில், இரு போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
பொதுவாகப் பார்த்தால், ஹார்திக் பாண்டியா கேப்டனாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர் வெற்றிகரமான உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து இருக்கும். அந்த போட்டி மட்டுமின்றி அதற்கு முன்னதாகவும் கூட, அவர் கடந்த காலத்தில் இந்தியாவை வழிநடத்தியிருக்கிறார்.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே யார் கேப்டனாக இருக்கவேண்டும் என்பதை சரியாக தேர்வு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அப்படி கேப்டனாக தேர்வு செய்யப்படும் வீரர்கள் பற்றி பேசும்போது சூர்யகுமார்யாதவ் பற்றிய பேச்சு இருக்க வேண்டும், ஏனெனில் சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கேப்டன் செய்தார். அங்கு அவர் சிறப்பாகவும் விளையாடினார்.
இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது, மேலும் அவர் நன்றாக விளையாடினார். ஆகவே, அவர் கூட இந்திய அணியை வழிநடத்த சரியான ஒரு வீரர். தேர்வாளர்கள் ஹார்திக் பாண்டியா நன்றாக விளையாடியிருக்கிறார் மற்றும் கேப்டனாகவும் அதே வேலையைச் செய்ய முடியும் எனக் கருதினால் அதுவும் நல்ல தேர்வாக தான் இருக்கும். என்னை பொறுத்தவரை இவர்கள் இருவரில் யார் கேப்டனாக வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்” எனவும் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…