ஹேப்பி பர்த்டே மஹிந்திர சிங் தோனி! அசைக்க முடியாத தல தோனி உருவான விதம் ஒரு தொகுப்பு!

Published by
மணிகண்டன்

இந்திய கிரிக்கெட் வீரர், வெற்றிகரமான கேப்டன், ஐசிசி நடத்திய அணைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளவர், எந்தவித சூழ்நிலையிலும் கோபப்படாமல் அணியை கூலாக வழிநடத்துபவர் என புகழப்படுகிறார் மஹேந்திர சிங் தோனி!

2007ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் தோற்ற பிறகு முதன் முறையாக நடைபெற இருந்த டி20 உலகோப்பையை கடுமையாக எதிர்த்து பின்னர் சீனியர் வீரர்கள் இல்லாத அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்று தனது தலைமையை நிரூபிக்க தொடங்கினார் நம்ம தல தோனி.

 

ஆரம்பமே வெற்றி கோப்பையுடன் தொடங்கினார் தோனி. பின்னர் ட்ராவிட் ஓய்வு பெற அதன் பிறகு அணியை வழிநடத்த கமிட்டி யோசிக்கையில் தோனி பெயரை பரிந்துரை செய்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

டோனி எப்போதும் எதிர்காலத்திற்க்கான அணியை கட்டமைப்பதில் உறுதியாய் இருப்பார். ஆதலால் அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றசாட்டு அவர் சீனியர் வீரர்களை புறந்தள்ளுகிறார். ஆனால் அவர் வலிமையான இந்திய அணியை உலகக்கோப்பைக்காக தயார் செய்து கொண்டிருந்தார்.

அவர் 50 ஓவர் போட்டிகள் விளையாடும் இந்திய அணியை வழிநடத்த தொடங்கிய போதே ஆஸ்திரேலியா அணியை அந்த நாட்டிலேயே அவர்களை தோற்கடித்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார் தோனி.

2009இல் கும்ளே ஓய்வு பெற மூன்று விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக தோனி மாறினார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளை தோற்கடித்து, முதன் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

2011 உலகக்கோப்பை போட்டி பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அணியில் ஒரு வீரராக சாதிக்காவிட்டாலும் அணி தலைவராக சிறப்பாக செயல்பட்டிருந்தார் தோனி. இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது =இந்திய அணி.

அதன் பிறகு 2013இல் நடைபெற்ற சேம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்று ஐசிசி நடத்திய அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் தோனி.

ரோஹித் சர்மா, பும்ப்ரா, புவனேஷ்குமார் போன்ற திறமையான வீரர்களுக்கு அணியில் தொடர் இடம் வழங்கி எதிர்கால இந்திய அணியை வலிமையாக கட்டமைத்த அந்த கேப்டன் தோனி தனது கேப்டன் பொறுப்பை விளக்கி கொண்டு தற்போது அணியில் பொறுப்பும் அனுபவமும் உள்ள முக்கிய வீரராக வலம் வருகிறார் மஹிந்திர சிங் தோனி!

Published by
மணிகண்டன்

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

2 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

3 hours ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

7 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

8 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

9 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

10 hours ago