RRvsGT Toss [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இந்த வாரத்தில், ரைவல்ரி வாரம் தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்த போட்டி இருந்து வருகிறது. இரண்டு அணிகளிலும் அடித்து விளையாடும் வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மழையின் காரணமாக சற்று நேரம் டாஸ் தள்ளி சென்றது. இதன் காரணமாக 7.30 மணிக்கு வழக்கமாக தொடங்கும் போட்டி தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டனாக தனது 50-வது போட்டியில் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
ராஜஸ்தான் அணி வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…