உலகக்கோப்பை மைதானத்தில் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்.! கைது செய்த குஜராத் போலீசார்.!

Published by
மணிகண்டன்

உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இன்று குஜராத் , அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் இந்திய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகையில், மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவு கொண்ட ஒரு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அந்த ஒரு ரசிகரை வெளியேற்றினர். அதன் பிறகு குஜராத் போலீசார் கைது செய்தனர். மைதானத்திற்குள் திடிரென நுழைந்து விராட் கோலியை சந்தித்ததால் ஆட்டம் சற்று நேரம் தடைபட்டது. அந்த ரசிகர் வெளியேறிய பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது.

அந்த ரசிகர் வெளியேறிய பிறகு விராட் கோலி 50 ரன்களை கடந்து 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். தற்போது 31 ஓவரில் 158 ரன்கள் எடுத்திருந்தனர். கே.எல்.ராகுல் 43 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

10 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

30 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

47 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago