#IPL2022: 4 விக்கெட்களை வீழ்த்திய லாக்கி பெர்குசன்.. குஜராத் அணி அபார வெற்றி!

Published by
Surya

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது, குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 10-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தனர்.

172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டிம் செய்பெர்ட் களமிறங்கினார்கள். 3 ரன்கள் அடித்து டிம் செய்பெர்ட் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய மந்தீப் சிங், ப்ரித்வி ஷாவுடன் இணைந்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய மந்தீப் சிங், 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை சற்று உயர்த்த, அவருக்கு இணையாக லலித் யாதவ் சிறப்பாக ஆடினார். 25 ரன்களில் லலித் யாதவ் தனது விக்கெட்டை இழக்க, 43 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட்தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரோமன் போவெல் 20 ரன்கள் அடித்து வெளியேற, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் அடித்தனர். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சில் லாக்கி பெர்குசன் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

52 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

1 hour ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

2 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

5 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago