சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது.
அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர்.
இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாகவும்.
இறுதியில் அவரை தான் நியமிக்க போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் இப்படி பல தகவல்கள் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி கம்பிரை குறித்து ரெவ் ஸ்போர்ட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் பேசுகையில்,”கம்பிர் இந்த பதவியில் ஆர்வம் அதிகம் உள்ளவர், மேலும் மிகவும் நேர்மையானவர்.
ஒரு ஐபிஎல் அணிக்கு ஆலோசகராக இருப்பதற்கும், ஒரு சர்வதேச அணிக்குப் பயிற்சியளிப்பதற்கும் உண்மையில் நிறைய வித்தியாசம் உள்ளது. அதுவும் இந்தியா போன்ற உயர்தர அணிக்கு பயிற்சியளிப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். அதை கௌதம் நன்கு அறிந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை எவ்வாறு கையாளுவது என்பது அவருக்கு நன்றாக தெரியும், மேலும், இந்திய அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கம்பிர் தன்னை மாற்றிக் கொள்வார்”, என்று கங்குலி கூறி இருந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…