லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் வரும் சீசனில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளது. புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய அணியான லக்னோ அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் லக்னோ அணி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவரை பயிற்சியாளராக நியமித்தது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆயிரம் கோடிக்கு கோயங்கா குழுமத்தால் வாங்கப்பட்ட அணியாக லக்னோ அணி உள்ளது.
கவுதம் கம்பீர் முன்பு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் கொல்கத்தா இரண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. லக்னோ அணியின் ஆலோசகரான பிறகு, கவுதம் கம்பீர் சார்பில், இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய கோயங்கா மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்திற்கு நன்றி என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
கம்பீர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லிக்காக மொத்தம் 154 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4218 ரன்கள் அடித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…