வெளியானது ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை ..!! தோனியின் கனவு நிறைவேறுமா ..?

Published by
அகில் R

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்க பட்ட ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை வெளியாகி போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, ஐபிஎல் தொடரின் 2-வது பாக அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.

பிசிசிஐ சொன்னது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.

தற்போது, ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் X தளத்தில் ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது போல அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது. tதற்போது வெளியாகி உள்ள இரண்டாம் கட்ட அட்டவணையில் ஏப்ரல்-8 ம் தேதி தொடங்கப்பட்டு, மே-26ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல்-8 தேதி போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணி போட்டியில் விளையாட உள்ளனர்.

குவாலிபயர்-1 மற்றும் எலிமினேட்டர் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் -2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. தோனியின் மிகப்பெரிய ஆசை தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி போட்டியை (ஃபேர்வெல்) சென்னையில் விளையாட வேண்டும் என்பது தான்.

தோனிக்கு இது வரை ஒரு நல்ல ஃபேர்வெல் போட்டி அமையாத காரணத்தால், சிஎஸ்கே ரசிகர்கள் இந்த இறுதிபோட்டிக்கு சென்னை அணி வந்து கோப்பையை வென்று அந்த வெற்றியை ‘தல’ தோனிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதை சென்னை அணியின் புதிய கேப்டனான ருதுராஜ்ஜூம், சென்னை அணி வீரர்களும் செய்வார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.

 

 

IPL SCHEDULE
IPL SCHEDULE
IPL SCHEDULE

Recent Posts

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

24 minutes ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

24 minutes ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

59 minutes ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

1 hour ago

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

2 hours ago

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

2 hours ago