நான்காவது ஒருநாள் போட்டி…!வான்கடே மைதானத்தில் இருந்து போட்டி மாற்றம் …!

Default Image

நான்காவது ஒருநாள் போட்டிக்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஐதராபாத்தில் நேற்று (அக்டோபர் 11 ஆம் தேதி ) கூடி ஆலோசித்தனர்.இதில் முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
Related image
இந்திய அணி வீரர்கள் விவரம்(முதல் 2 ஒருநாள் போட்டி) :விராட் கோலி(கேப்டன் ), ரோகித் (துணை கேப்டன் ),தவான் ,ராயுடு,மனிஷ் பாண்டே ,பண்ட் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,ஷர்துல் தாகூர், சாகல்,லோகேஷ் ராகுல் ,முகமது சமி ,கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டிக்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது மும்பையில் உள்ள பார்பனே மைதானத்தில் நடைபெறுகிறது.முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.தற்போது நடைபெறும் இடம் மாற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்