முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால், புல்புல் சாஹாவை திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்,வர்ணனையாளர் மற்றும் தற்போது பயிற்சியாளராக உள்ள அருண் லால்(வயது 66),தன்னை விட 28 வயது குறைவான ஆசிரியராக இருக்கும் புல்புல் சாஹா என்பவரை நேற்று (மே 2 ஆம் தேதி) கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் இன்னில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் லால் மற்றும் புல்புல் இருவரும் சிறிது காலம் டேட்டிங் செய்து வருவதாகவும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே,லால் தனது முதல் மனைவி ரீனாவைப் பிரிந்தார்.ஆனால் தனது உடல்நிலை குறைவு காரணமாக ரீனா இன்னும் லாலுடன் வாழ்கிறார் என்றும்,ரீனாவின் சம்மதத்தை பெற்றுதான் லால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.மேலும் இந்த ஜோடி திருமணத்திற்குப் பிறகு ரீனாவை கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,திருமணத்தின் புகைப்படங்களை புல்புல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து,”எங்களை ஆதரித்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…