முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால், புல்புல் சாஹாவை திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்,வர்ணனையாளர் மற்றும் தற்போது பயிற்சியாளராக உள்ள அருண் லால்(வயது 66),தன்னை விட 28 வயது குறைவான ஆசிரியராக இருக்கும் புல்புல் சாஹா என்பவரை நேற்று (மே 2 ஆம் தேதி) கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் இன்னில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் லால் மற்றும் புல்புல் இருவரும் சிறிது காலம் டேட்டிங் செய்து வருவதாகவும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே,லால் தனது முதல் மனைவி ரீனாவைப் பிரிந்தார்.ஆனால் தனது உடல்நிலை குறைவு காரணமாக ரீனா இன்னும் லாலுடன் வாழ்கிறார் என்றும்,ரீனாவின் சம்மதத்தை பெற்றுதான் லால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.மேலும் இந்த ஜோடி திருமணத்திற்குப் பிறகு ரீனாவை கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,திருமணத்தின் புகைப்படங்களை புல்புல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து,”எங்களை ஆதரித்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…