ஜாதி குறித்து பேச்சு – யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

Published by
Venu

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் , யுவராஜ் சிங் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.அதாவது யுஸ்வேந்திர  சாகல் ஜாதி குறித்து பேசியது தொடர்பாக யுவராஜ் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஹரியானா போலீசார் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.ஹிசார் போலீசார் ஐபிசியின் 153, 153 ஏ, 295, 505 பிரிவுகளின் கீழும் , எஸ்சி / எஸ்டி சட்டத்தின் 3 (1), 3 (1எஸ்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு யுவராஜ் சிங் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் உரையாடினார். இந்த உரையாடலின் போது , இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர  சாகல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து யுவராஜ் சிங்  பேசினார். இதில் சாகலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் பேசியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது .இதைத்தொடர்ந்து யுவராஜ் சிங் மன்னிப்பு கோரினார். மேலும் இது குறித்து யுவராஜ் சிங் அளித்த விளக்கத்தில், “ஜாதி, நிறம், மதம் அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் நம்பவில்லை என்பதை இது தெளிவுபடுத்துவதாகும். மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து என் வாழ்க்கையை செலவிட்டேன். நான் கண்ணியத்தை நம்புகிறேன் என்று யுவராஜ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago