#SportsUpdate: அரைசதம் விளாசிய ஸ்ரேயஸ்.! இங்கிலாந்திற்கு 125 ரன் இலக்கு .!

Default Image

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனைதொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் முழுவதும்  அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கத்திலே இந்திய அணி விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் ஒரு ரன்,  தவான் 4 ரன்னும், இந்திய அணியின் கேப்டன் கோலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர், இறங்கிய ரிஷாப் பந்த் நிதானமாக விளையாடி 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையெடுத்து, மத்தியில் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி, 65 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தனர். 125 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen