தற்போது ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் ஃபேர்வெல் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் – பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தாங்கள் எப்போதும் தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயாராக இருந்ததாகவும், ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓய்வை அறிவித்துவிட்டு தான் ஒரு வித்தியாசமான வீரர் என்பதை தோனி வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் ஃபேர்வெல் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…