IPL Scam [file image]
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆப் வாய்ப்புக்காக மீதம் இருக்கும் 2 இடத்தில் ஒரு இடத்திற்க்காக கடைசி போட்டியில் விளையாடவுள்ளனர்.
இதெல்லாம் ஒரு முனையில் இருக்க ஐபிஎல் ரசிகர் ஒருவர் ஒரு மிகப்பெரிய மோசடியில் தற்போது சிக்கி உள்ளார். பணத்தை இழந்த அந்த நபர் ஆர்சிபி-சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவதற்கு இணயத்தில் தேடி திரிந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ‘ipl_2024_tickets_24’ என்ற கணக்கையும் கண்டுள்ளார்.
பத்மா சின்ஹா விஜய் குமார் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர் தன் மீது நம்பிக்கையைப் பெறுவதற்காக அவரது ஆதார் விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணைக் கூட அளித்து, அங்கீகரிக்கப்பட்ட ஐபிஎல் டிக்கெட் விற்பனையாளர் என்று கூறி இருக்கிறார்.
பணம் இழந்தவரும் அவரை நம்பி ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 2,300 என 3 டிக்கெட்டுகளுக்கான தொகையான ரூ.7,900 ரூபாயை அவருக்கு அனுப்பி டிக்கெட் பெற முயற்சித்திருக்கிறார். ஆனாலும், அந்த நபர் இ-டிக்கெட்டை (e-ticket) பெறவில்லை. இருந்தாலும் டிஜிட்டல் கோளாறு காரணம் டிக்கெட்டுகள் ஓபன் ஆகவில்லை என பல்வேறு காரணங்களை கூறி அந்த நபரை மீண்டும் மீண்டும் பணம் செலுத்த வைத்துள்ளார். அவரும் அதை நம்பி திரும்ப பணம் செலுத்தி உள்ளார்.
ரூ.67,000 த்தை நெருங்கிய போது சுதாரித்து கொண்ட அந்த நபர் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டு சந்தேகபட்டு காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு பணத்தை இழப்பதற்கு தவிர்க்க அதிகாரப்பூர்வ இணையங்களில் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்குமாறும் காவல் துறையினர் கிரிக்கெட் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…