ஃபகார் ஜமானின் அதிரடியான சதம்! பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி பாதியில் நிறுத்தம்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகக்கோப்பை தொடரில் 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிக்ஸர் மழை மொழிந்தனர்.

இதனால் இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108 ரன்கள், கேன் வில்லியம்சன் 95 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 41 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்துலயே அப்துல்லா ஷபீக் விக்கெட்டை விட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களத்தில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

அதன்படி, அதிரடியாக விளையாடிய ஃபகார் ஜமான் 63 பந்துகளில் சதம் அடித்து நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த சமயத்தில் பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 21.3 ஓவரில் 160 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஃபகார் ஜமான் 106, கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 242 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த சூழலில், போட்டி மழையால் நடைபெறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தான் DLS படி, நியூசிலாந்து அணியைவிட 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால், மழையால் போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாவே அமையும் என்று கூறுகின்றனர். இருப்பினும், மழை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

1 minute ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

38 minutes ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

12 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago