ஃபகார் ஜமானின் அதிரடியான சதம்! பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி பாதியில் நிறுத்தம்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகக்கோப்பை தொடரில் 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிக்ஸர் மழை மொழிந்தனர்.

இதனால் இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108 ரன்கள், கேன் வில்லியம்சன் 95 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 41 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்துலயே அப்துல்லா ஷபீக் விக்கெட்டை விட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களத்தில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

அதன்படி, அதிரடியாக விளையாடிய ஃபகார் ஜமான் 63 பந்துகளில் சதம் அடித்து நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த சமயத்தில் பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 21.3 ஓவரில் 160 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஃபகார் ஜமான் 106, கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 242 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த சூழலில், போட்டி மழையால் நடைபெறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தான் DLS படி, நியூசிலாந்து அணியைவிட 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால், மழையால் போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாவே அமையும் என்று கூறுகின்றனர். இருப்பினும், மழை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

41 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

43 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

1 hour ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

3 hours ago