இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதிரடி பேட்டிங் மற்றும் வலுவான பந்துவீச்சை கொண்டிருக்கும் ஐதராபாத் அணியுடன் நேற்றைய போட்டியில் மோதியது. ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் பெங்களுரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் ரசிகர்களும் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியதாவது, கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறந்த விளையாட்டை கொடுத்துள்ளோம். அதன்படி கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்களில் தோல்வியை சந்தித்தோம். தற்போது ஐதராபாத்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுள்ளோம்.

ஒரு டீமாக நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமான ஒன்று. அதாவது, வீரர்களிடம் என்னதான் நம்பிக்கை அளிக்கும்படி பேசினாலும் சிறந்த ஆட்டம் தான் உண்மையான நம்பிக்கையை அளிக்கும். எனவே, இந்த வெற்றியுடன் நாங்கள் இரவில் நிம்மதியாக உறங்குவோம்.

இந்த ஐபிஎல் தொடரில் போட்டிகள் வலுவாக உள்ளது என்றால் அணிகளும் வலுவாக உள்ளன. அதனால் 100% இல்லையென்றால் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது. விராட் மற்றும் க்ரீன் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் சின்னசாமி ஸ்டேடியம் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், அங்கு பந்துவீசுவது கடினம் எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

38 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

43 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago