பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் வென்றுள்ள நிலையில், நேற்று 7ஆவது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பௌலிங் தேர்வு செய்து விளையாடியது.
இதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலான் 47 பந்துகளில் 78* ரன்களும் (8போர்கள், 3சிக்ஸர்கள்), ஹாரி புரூக் 29 பந்துகளில் 46* ரன்களும் (1போர், 4சிக்ஸர்கள்) எடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 210 ரன்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் முதல் ஒவரில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதற்கு அடுத்த ஓவரில் ரிஸ்வான் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஒக்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களும், டேவிட் வில்லி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டேவிட் மலான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடரையும் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஹாரி புரூக், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…