#ENGvIND:5-வது டெஸ்ட் போட்டி- உலக சாதனை படைத்த பும்ரா;அதிரடி காட்டிய ஜடேஜா!

Published by
Edison

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்களிலும்,கோலி 11 ரன்களிலும் விக்கெட்டை இழக்க,அதன் பின்னர்,களம் கண்ட ரிஷப் பண்ட் நான்கு சிக்சர்கள்,20 பவுண்டரிகளுடன் 146 ரன்களும்,ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர்.

இதனையடுத்து,இறங்கிய வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா,இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட் வீசிய ஓவரில் மட்டும் 35 ரன்களை விளாசினார்.இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக,இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை யுவ்ராஜ் சிங் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இங்கிலாந்து அணி 27 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,மழையால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

8 mins ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

19 mins ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

1 hour ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

1 hour ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago