கவலையில் பாகிஸ்தான்…டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

Published by
murugan

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 44-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்  மோதுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி போட்டி என்பதால்  பாகிஸ்தான் தங்களால் முடிந்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது.

நியூசிலாந்து அணி தற்போது 0.743 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 0.036 மற்றும் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டும் தேவைப்படுகிறது. நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட் பெற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை அடித்து இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்திற்கு முன்கூட்டியே வீழ்த்த வேண்டும்.

அப்படி இல்லையென்றால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி  நிர்ணயித்த  ​இலக்கை 2.4 ஓவர்களில் அதாவது 16 பந்துகளில் அடைய வேண்டும். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்: 

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

4 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

5 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago