#England vs India: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி மற்றும் 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் மாலன் 5 ரன் எடுத்து வெளியேற, சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீது 63 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பிறகு களம்கண்ட ஒல்லி போப் 2, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆனார்கள். அடுத்து இறங்கிய மொயின் அலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை கொடுக்க, இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 92.2 ஓவரில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ் 3, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், 1-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த 4வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி 50 ஆண்டுகளுக்கு பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. தொடரின் இறுதி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி இந்தியா வெற்றி பெற்றது மூலம் ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

16 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

2 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago