#England vs India: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி மற்றும் 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் மாலன் 5 ரன் எடுத்து வெளியேற, சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீது 63 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பிறகு களம்கண்ட ஒல்லி போப் 2, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆனார்கள். அடுத்து இறங்கிய மொயின் அலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை கொடுக்க, இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 92.2 ஓவரில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ் 3, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், 1-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த 4வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி 50 ஆண்டுகளுக்கு பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. தொடரின் இறுதி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி இந்தியா வெற்றி பெற்றது மூலம் ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

9 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

10 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

12 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

14 hours ago