ENGLAND vs INDIA:சென்னை அணி வீரர் தீபக் சாகருக்கு இந்திய அணியில் இடம்!விராட் கோலி கையால் இடம்பிடித்த சாகர்

Default Image

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி இருபது ஓவர் போட்டி இன்று இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியில் பூம்ரா காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிய தீபக் சாகர் இடம் பிடித்தார்.முதல் இரண்டு இருபது ஓவர் போட்டியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு தீபக் சாகருக்கு இடம் கிடைத்துள்ளது.இது தான் அவரது அறிமுக போட்டி ஆகும்.இவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் தொப்பியை வழங்கி அறிமுகப்படுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்