ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.
பின்னர் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ,
ஜேசன் ராய் இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்திலே தடுமாறிய ஜேசன் ராய் நான்காவது ஓவரில் 9 ரன்னுடன் வெளியேற பிறகு இறங்கிய கேப்டன் ஜோ ரூட் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 112 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.இதற்கு முன் 1907-ம் ஆண்டு சவுத்ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் அடித்து இருந்தது.அதன் பின் நேற்றைய போட்டியில் தான் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…