டெஸ்ட்டில் கறுப்புப்பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்.. ஏன் தெரியுமா..?

Default Image

கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது, இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் தங்களது உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களுக்கு நிதி திரட்ட 100  வயதை எட்டிய கேப்டன் டாம் மூர் முடிவு செய்தார். இதனால், தனது நூறாவது பிறந்தநாளுக்குள் (அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள்)  1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கபோவதாக அறிவித்தார்.

1000 பவுண்ட் நிதி திரட்ட நடந்த கேப்டன் டாம் மூருக்கு 39 மில்லியன் பவுண்ட்(இந்திய மதிப்பில் 387 கோடி) நிதி திரண்டது. இந்நிலையில், கேன்சர் உட்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்தநிலையில் கேப்டன் டாம் மூர் கடந்த 02-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக இன்று சென்னை டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman