#ENGvsIND : 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்த இங்கிலாந்து..!

Default Image

2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர்.

2-ஆம் நாள் ஆட்ட பாதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுகளையும், மெயின் அலி ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டொமினிக் சிப்லி, சிராஜ் வீசிய பந்தை ராகுலிடம் கேட்சை கொடுத்து 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹசீப் ஹமீது சிராஜிடம் போல்ட் ஆனார்.

பின்னர். கேப்டன் ஜோ ரூட் களமிறங்க ரோரி பர்ன்ஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடிக்காமல் 49 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி  45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஜானி பேர்ஸ்டோ 6, ஜோ ரூட் 48 ரன் எடுத்து உள்ளனர். இந்திய அணியில், சிராஜ் 2, ஷமி 1 விக்கெட்டை பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்