3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்ய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மைதானத்தில் நுழைந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த அவர் பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார் பின்னர், அவர் பாதுகாப்பு ஊழியர்கள் மைதானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில், லீட்ஸில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்ய ரசிகர் ஜார்வோ களத்திற்கு வந்தார். பின்னர், அவர் இந்திய பேட்ஸ்மேன் இல்லை என தெரிந்ததும், ஜார்வோவை மைதான பாதுகாப்பு ஊழியர்கள் எச்சரித்து வெளியேற்றினர். தொடர்ந்து 2 போட்டிகளில் இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…