ENGvWI [file image]
T20WC சூப்பர் 8: நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது நேற்று இரவு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில், 2-ஆம் பிரிவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது செயின்ட் லூசியாவில் டேரன் சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சற்று அதிரடியுடன் தொடங்கியது. விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.
இங்கிலாந்து அணியும் நன்றாகவே பந்து வீசியதால் ஓரளவுக்கு ஸ்கோர் உயராமல் பார்த்து கொண்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இலக்கை எட்டுவதற்கு களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்கத்தில் களமிறங்கிய ஃபில் சால்ட் வானவேடிக்கை காட்டினார்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஃபில் சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 என்ற இலக்கை எட்டி வெற்றி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது இங்கிலாந்து. அதிரடியாக விளையாடிய ஃபில் சால்ட் 87* ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு உறுதுணையாக நின்று அணியை வெற்றி பெற செய்தார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…