ENGvWI [file image]
T20WC சூப்பர் 8: நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது நேற்று இரவு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில், 2-ஆம் பிரிவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது செயின்ட் லூசியாவில் டேரன் சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சற்று அதிரடியுடன் தொடங்கியது. விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.
இங்கிலாந்து அணியும் நன்றாகவே பந்து வீசியதால் ஓரளவுக்கு ஸ்கோர் உயராமல் பார்த்து கொண்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இலக்கை எட்டுவதற்கு களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்கத்தில் களமிறங்கிய ஃபில் சால்ட் வானவேடிக்கை காட்டினார்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஃபில் சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 என்ற இலக்கை எட்டி வெற்றி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது இங்கிலாந்து. அதிரடியாக விளையாடிய ஃபில் சால்ட் 87* ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு உறுதுணையாக நின்று அணியை வெற்றி பெற செய்தார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…