தீராத ஸ்பைடர் கேமரா சர்ச்சை ..!! பரிதாபமாக ஆட்டமிழந்த ஜிதேஷ் சர்மா !

Published by
அகில் R

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஸ்பைடர் கேமரா சர்ச்சை என்பது வந்துவிடும். அதே போல இந்த போட்டியிலும், ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாபி அணியின் பேட்டிங் சற்று மோசமாக இருந்த சமயத்தில் சாம் கர்ரன்னும், ஜிதேஷ் ஷர்மாவும் தாக்குப்பிடித்து விளையாடினர்.

அவர்களது சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாபி அணியின் ஸ்கோரும் உயர்ந்து கொண்டே இருந்தது. அப்போது, நன்றாக விளையாடி கொண்டிருந்த ஜிதேஷ் சர்மா ஆட்டத்தின் 18.4 ஓவரில் சிராஜ் வீசிய பந்தை மேலே தூக்கி அடித்தார். அப்போது பந்தை பெங்களூரு அணியின் ஃபீல்டராக நின்ற அனுஜ் ராவத் அந்த பந்தை கனகச்சிதமாக பிடித்தார், களநடுவரும் அதனை விக்கெட் என் அறிவித்தனர்.ஆனால், பிரச்சனை என்னவென்றால் அதன் பிறகு நடுவர்கள் சில நிமிடங்கள் அவரை காத்திருக்க சொன்னார்கள்.

ஏனென்றால் அவர் அடித்த பந்தானது மைதானத்தின் மேல உள்ள இங்கும் அங்கும் சுற்றி திரியும் ஸ்பைடர் கேமராவின் வயர் (WIRE) மீது பட்டது போல இருக்கிறது என்று அதனை மூன்றாம் நடுவர்கள் பரிசீலனை செய்தனர். ஒரு வேளை அந்த பந்து ஸ்பைடர் கேமராவின் வயரை தொட்டிருந்தால் அந்த பந்தை நடுவர்கள் ‘டெட் பால்’ என்று அறிவித்து விடுவார்கள். அதனால் அவர் சில நிமிடம் களத்தில் காத்திருந்தார்.

ஆனால், சில நிமிடங்கள் கழித்து அவர் அடித்த அந்த பந்து ஸ்பைடர் கேமராவின் வயரை தொட்டதற்கான எந்த ஒரு ஆதார வீடியோ இல்லாத  காரணத்தால் இறுதியாக களநடுவர்களின் ‘விக்கெட்’  என்ற முடிவையே மூன்றாம் நடுவர்களும் அறிவித்தனர். ஆனால், தொலைவிலிருந்து பார்த்தால் படாதது போல் இருந்தாலும் அதற்கான போதிய ஆதர வீடியோ இல்லாத காரணத்தால் இப்படி முடிவெடுப்பது தவறான காரியம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சர்ச்சையாக சமூக தளத்தில் பேசி வருகிறார்கள்.

Recent Posts

GT vs MI : அரைசதம் அடித்து அசத்திய சுதர்சன்… மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

15 minutes ago

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

3 hours ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

3 hours ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

4 hours ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

4 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

4 hours ago