ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்
கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார்.
IPLலில் தினமும் போட்டிப்போடும் 2 அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையிலேயே இந்த ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும் வருகிகின்றது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை கொல்கத்தா அணியும்,சென்னை அணியும் விளையாடியது.இப்போட்டியை ராஸிக் ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில் ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.
இதே போல் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தாண்டி, ராஸிக் இச்சாதனை படைத்து வெற்றியை தன்வசப்படுத்தினார்.வென்ற ராஸித் கண்ணூரில் ஏகேஜி மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்பெற்ற தொகையில் ₹30 லட்சம் வரி போக, மீதம் ₹70 லட்சம் தொகை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…